தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் மருந்து தட்டுப்பாடு என பரவும் செய்தி புணையப்பட்டது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி கட்டடங்களின் நிலை நிலை குறித்தும் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனை மிகவும் பழம் பெருமை வாய்ந்தது என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி காரணமாகவும், மழை நீர் தேக்கம் காரணமாக கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது என்றும், ஓராண்டாக மாணவர்கள் ஆய்வக பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது என்றும் தெரிவித்தார். திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி இடமாற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு திருமங்கலத்திலேயே ஹோமியோபதி கல்லூரி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் முதல் வாரத்தில் டெல்லிக்கு சென்று எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.
அதே போல், தென்காசி உள்ளிட்ட இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டு வருவது குறித்தும் வலியுறுத்தப்படும் என தெரிவித்த அவர், திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மட்டுமே மாற்றம் செய்யப்படும் என்றும் ஹோமியோபதி மருத்துவமனை அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மருந்து தட்டுப்பாடு புணையப்பட்ட செய்தி என்றும் தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
நீட் தேர்வில் விலக்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில விவரங்களை தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ளதாகவும், அதன் பின் குடியரசு தலைவர் நீட் விலக்கிற்கு ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்