இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், ‘சுயம் என்று ஏதுமில்லை’ என வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருவதாக எக்கோ நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர் மட்டுமே உருவாக்குவது அல்ல, அது பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல்வேறு தரப்பினரும் இணைந்து உருவாக்கும் ஒன்று எனவும், பாடல் வரிகள் இல்லாமல் எப்படி பாடல் உருவாக முடியும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்