கடந்த காலத்தில் நலிவடைந்த நிலையில் இருந்த மின்வாரியத்தை மேம்படுத்தவும்,
நவீனப்படுத்தும் நோக்கோடு மட்டுமே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார்
துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் இந்த வேலை
வாய்ப்பு முகாமில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தொழிலாளர்
நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி அரசு
கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் செந்தில்
பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சுந்தரவதனம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூரில் நாளை நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 26 ஆயிரம்
பணியிடங்களை நிரப்பும் வகையில், 220 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கரூர் மாவட்டத்தைச்
சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கூறினார்.
மேலும், மின் இணைப்புகளுடன் ஆதாரணனை இணைப்பது குறித்து எழுகின்ற தொடர் சர்ச்சை குறித்து பதில் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சிக்காலத்தில்
நலிவடைந்த மின்வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தும் நோக்கத்தோடு மட்டுமே
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதி வரை அதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதுவரை இரண்டு கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்
செந்தில்பாலாஜி தெரிவித்தார்.