கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்காக உக்ரைனுக்கு மேலும் 200 மில்லியன் டாலர்களை வழங்க அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தாலும் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெறும் நேரடி பேச்சு வார்த்தையே போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேரில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையை நடுவராக இருந்து நடத்தி தருமாறு இஸ்ரேல் பிரதமர் நஃபதலி பென்னெட்டை ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதல் அணு ஆயுதங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை தடுக்க ஆயுதங்கள் மற்றும் உபகணரங்களை வாங்குவதற்காக உக்ரைனுக்கு மேலும் 200 மில்லியன் டாலர்களை வழங்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 200 மில்லின் டாலர்கள் உடனடியாக விடுக்கப்படும் என்றும், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை உக்ரைனுக்கு 1.2 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஒரே வருடத்தில் 4வது முறையாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.