காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவஞ்சூரில் தங்கள் பகுதிக்கு தேவையான
அடிப்படை வசதிகளை கேட்டு நாடகம் மூலம் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் நாட்டரசன்பட்டு ஊராட்சியில்,
சிறுவஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 200 மாணவ மாணவியர்கள்
பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய கழிவறை வசதி இல்லாமல்
அவதிப்பட்டு வந்தனர்.
மேலும், இந்த பள்ளிக்கு கழிவறை வசதி மற்றும் குழந்தைகள் பூங்கா கோரி தனியார் தொழிற்சாலையிடம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சாம்பசிவம் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து, 28 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு கழிவறை வசதி
மற்றும் குழந்தைகள் பூங்கா அமைக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இதன் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சாம்பசிவம்
தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தனியார் நிறுவன
நிர்வாக இயக்குநர் வினோத் அப்புநிர்மல் , மணிமங்கலம் மற்றும் காவல் உதவி
ஆய்வாளர் ரவி கலந்துகொண்டு குழந்தைகள் பூங்கா மற்றும் கழிவறை கட்டிடத்தை
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் கலை
நிகழ்ச்சி நடைபெற்றது .
மாணவர்கள் கிராமத்தில் இதுவரை இல்லாத மருத்துவமனை வசதி, உயர்நிலை
பள்ளி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென்று,
நாடகம் மூலம் நடித்து காட்டினர்.
இந்நிகழ்வு தனியார் நிறுவன, தொன்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில்
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற வார்டு
உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
—–கு.பாலமுருகன்