எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஜூலை 8-ம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் அன்றாட நிகழ்வாக மாறிப்போயுள்ளது. சில நேரங்களில் இலங்கை கடற்படையினர் துப்பாகிச்சூடு கூட நடத்தியிருக்கின்றனர். ஒவ்வொரு முறை இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளுடன் தமிழ்நாட்டு மீனவர்களை பிடிக்கும் போது மத்திய, மாநில அரசுகளின் அழுத்தம் காரணமாக நீண்ட போராட்டத்திற்கு பின் விடுதலைச் செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்களது படகுகள் உடனடியாக விடுவிக்கப்படுவதில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போல் கடந்த ஜீலை 8-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அதோடு 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இந்நிலையில் அதிபர் ரணில் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். இலங்கையின் அதிபரான பிறகு ரணில் இந்தியா வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அவரை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்தில் வரவேற்றார். அவர் இன்று புது டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்தநிலையில், ஜூலை 8-ம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளனர். இந்த 15 பேர் மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்து கைது செய்யப்பட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ரணில் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையேயான சந்திப்பின் போது, இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.