சென்னை திருவேற்காடு நூம்பல் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் “மழைநீர் வடியாத பிரச்னை கடந்த 2015லிருந்து தொடர்கிறது. ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்னை நீடிக்கிறது. 2015ல் ஒரு பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மழைநீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பு தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் பாம்புகள் சர்வ சாதாரணமாக வீடுகளுக்கு புகுந்து விடுகின்றன. மட்டுமல்லாது இங்கு கழிவு நீர் வடிகால் கட்டமைப்பு ஏதும் இல்லை. அரசு இந்த விடயங்களை உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.