தொடர்ந்து உயரும் தங்கம் விலை… பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.53, 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.  அந்த…

சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.53, 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் நேற்று கிராம் ஒன்றிற்கு ரூ. 45 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,660-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில்,  இன்று கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 6,670க்கு விற்பனையானது.  சவரன் ஒன்றிற்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 53, 360க்கு விற்பனையாகிறது.

வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும் ,  ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  இன்று கிராமிற்கு ரூ. 1 குறைந்து ரூ.87க்கு விற்பனையாகிறது.  தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.