போடி அருகே டாஸ்மாக் கடை அருகே முருகன் கோயில் அமைய உள்ளதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பங்காரு
நாயக்கர் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள்
உள்ளிட்டோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளனர். இந்தநிலையில், மதுபானக் கடைக்கு முன்பு உள்ள இடத்தில் முருகன் கோயிலை நிர்மாணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த மதுபானக் கடை இடமாற்றம் செய்யப்படும் என்று மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
கோயில் அமைய உள்ள 7 சென்ட் இடத்தை போடியைச் சேர்ந்த வியாபாரி முருகேசன் என்பவர் பழனி பாதயாத்திரை குழுவிற்கு தானமாக வழங்கியுள்ளர். தற்போது திருவாசகம் முன்னேறுதல் நிகழ்ச்சியினை நடத்தி விரைவில் கோயிலுக்கான பூமி பூஜையினை நடத்த உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.,
—ரெ.வீரம்மாதேவி