கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 39,649…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 39,649 பேர் குணமடைந்துள்ளனர். 724 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,74,376 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,00,14,713 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல் மொத்த உயிரிழப்பு 4,08,764 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,50,899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 37,73,52,501 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 12,35,287 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

https://twitter.com/MoHFW_INDIA/status/1414440418909982728

மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக 38,86,09,790 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 37,31,88,834 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 1,54,20,956 டொஸ் கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்களிடம் கையிருப்பு உள்ளது. அதேபோல 67,84,230 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படவுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.