நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 39,649 பேர் குணமடைந்துள்ளனர். 724 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,74,376 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,00,14,713 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல் மொத்த உயிரிழப்பு 4,08,764 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,50,899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாடு முழுவதும் இதுவரை 37,73,52,501 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 12,35,287 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
#𝐂𝐎𝐕𝐈𝐃𝟏𝟗 𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄
➡️ More than 38.86 Cr vaccine doses provided to States/UTs.
➡️ More than 1.54 Cr doses still available with States/UTs and private hospitals to be administered.https://t.co/lxd4ibYtav pic.twitter.com/DE71ExHg0d
— Ministry of Health (@MoHFW_INDIA) July 12, 2021
மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக 38,86,09,790 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 37,31,88,834 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 1,54,20,956 டொஸ் கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்களிடம் கையிருப்பு உள்ளது. அதேபோல 67,84,230 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படவுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது