முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

கடலோர பகுதியில் ஏற்பட்ட திடீர் சூறாவளி | பீச் பக்கம் போகாதீங்க! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று  இன்றும் நாளையும் வீசும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதன் தொடர்ச்சியாகத் தென் தமிழக கடல் பகுதியில் கடல் சீற்றமாகக் காணப்படும். சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கடல் அலைகள் அரை மீட்டர் முதல் 1½ மீட்டர் உயரம் வரை எழும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதையும், கடற்கரை பூங்காக்களில் நடமாடுவதையும், கடலோர மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மீனவர்கள் தங்கள் படகுகளைக் கடற்கரையிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ கிராமங்களுக்குக் கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். கடற்கரையோர மீனவ மக்கள் பாதுகாப்பாக, விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தெரிவித்து உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை – இன்று தரவரிசைப் பட்டியல் வெளியாக வாய்ப்பு…!

Web Editor

சென்னை பிரபல ரவுடி டோக்கன் ராஜா வெட்டிப் படுகொலை..!!

Web Editor

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

Jayasheeba

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading