புனித ஹஜ் பயணம் தொடக்கம் – காஷ்மீரில் இருந்து புறப்பட்டது முதல் குழு!

புனித ஹஜ் பயணம் தொடங்கிய நிலையில்,  ஜம்மு-காஷ்மீரில் இருந்து முதல் குழு  2 விமானங்கள் மூலம் சௌதி அரேபியாவுக்குப் புறப்பட்டது.  இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில், …

புனித ஹஜ் பயணம் தொடங்கிய நிலையில்,  ஜம்மு-காஷ்மீரில் இருந்து முதல் குழு  2 விமானங்கள் மூலம் சௌதி அரேபியாவுக்குப் புறப்பட்டது. 

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில்,  இந்தாண்டு ஜம்மு-காஷ்மில் இருந்து 7,008 பயணிகள் சௌதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஸ்ரீநகரின் பெமினா புறநகரில் அமைந்துள்ள ஹஜ் இல்லத்திற்கு அதிகாலை முதலே பயணிகள் வரத் தொடங்கினர்.  தொடர்ந்து,  ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து  தலா 321 பயணிகளை ஏற்றிக் கொண்டு இரண்டு விமானங்கள் இன்று புறப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.