” தலை முடியை ஒழுங்காக வெட்டவில்லை “ – தலைமை ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவன் காயம்..!

ராமநாதபுரம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் முடி முறையாக வெட்டாமல் பள்ளிக்கு வந்ததால் தலைமை ஆசிரியர் தாக்கியுள்ளார்.  தலையில் காயம் ஏற்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.  ராமநாதபுரம் மாவட்டம் அருகே  ரெகுநாதபுரம்  அரசு  மேல்நிலைப் பள்ளியில்…

ராமநாதபுரம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் முடி முறையாக வெட்டாமல் பள்ளிக்கு வந்ததால் தலைமை ஆசிரியர் தாக்கியுள்ளார்.  தலையில் காயம் ஏற்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 
ராமநாதபுரம் மாவட்டம் அருகே  ரெகுநாதபுரம்  அரசு  மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனை   முறையாக தலை முடி வெட்டாமல் வந்ததாக கூறி என தலைமை ஆசிரியர்  கண்டித்ததாக தெரிகிறது.
மேலும் கையில் மாணவனின்  தலை முடியை பிடித்து சுவற்றில்  மோதியதாக கூறப்படுகிறது.    இதில் மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தலையிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டதால் உடனடியாக அவர் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற உத்தரவு  இருந்தும்  அதனை பொருட்படுத்தாமல் காயம் ஏற்படும் அளவுக்கு அடித்தது   தவறு என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.