தென்காசியில், ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் சுத்திகரிப்பு
நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர்
பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி, சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் மற்றும் கசடு கழிவு ஆகியவற்றின், ஒருங்கிணைந்த புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. பாதாள சாக்கடை இல்லாத நகராட்சிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
சுத்திகரிப்பு நிலையம் வாயிலாக, வீடுகளில் செப்டிக் டேங்குகளில்
சேகரமாகும் மனித கழிவுகள் உள்ளடக்கிய தண்ணீரை இந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் நீர்நிலைகளில் கழிவு நீர்கள் கொட்டப்படுவது, முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், சுரண்டை நகராட்சியில் ரூ10 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள
சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி, தென்காசி சட்டமன்ற உறுப்பினர்
பழனி நாடார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி
முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கு. பாலமுருகன்