31.4 C
Chennai
June 17, 2024
தமிழகம் செய்திகள்

தென்காசியில் ரூ.10 கோடியில் கட்டப்படும் சுத்திகரிப்பு நிலைய அடிக்கல் நாட்டு விழா!

தென்காசியில், ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் சுத்திகரிப்பு
நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர்
பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி, சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் மற்றும் கசடு கழிவு ஆகியவற்றின், ஒருங்கிணைந்த புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. பாதாள சாக்கடை இல்லாத நகராட்சிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சுத்திகரிப்பு நிலையம் வாயிலாக, வீடுகளில் செப்டிக் டேங்குகளில்
சேகரமாகும் மனித கழிவுகள் உள்ளடக்கிய தண்ணீரை  இந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் நீர்நிலைகளில் கழிவு நீர்கள் கொட்டப்படுவது, முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், சுரண்டை நகராட்சியில் ரூ10 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள
சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி, தென்காசி சட்டமன்ற உறுப்பினர்
பழனி நாடார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி
முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading