“Cringe டயலாக் பேசி இருக்கிறார் CM” – உதயநிதி ஸ்டாலின்

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் மற்று தீட்யணைப்புத் துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரையாற்றினார். அப்போது அவர் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அப்போது முதலமைச்சரின் பதிலுரை மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச வாய்ப்பளிக்குமாறு திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஒந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?

பதிலற்ற பதிலுரை – பழிபோடும் பேச்சு – diversion tactics – மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.

எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.