தொடர்ந்து பல படங்கள் தோல்வியடைந்து வருவதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா தற்போது உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரரான மைக் டைசனுடன் இணைந்து நடித்திருக்கும் படம்தான் ‘லைகர்’ . தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் தயாரித்திருக்கும் இந்த படத்தைப் பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார்.தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய ‘லைகர்’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி உலகமெங்கும் ‘லைகர்’ படம் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியானது.ஆனால் இப்படம் வெளியான நாள் முதலே நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்துவருகிறது.அடித்துப் பிடித்து முதல் நாள் முதல் காட்சியைத் திரையரங்கிற்குச் சென்று பார்த்த ரசிகர்கள் இப்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் பூரி ஜெகன்னாத் மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணியில் உருவாக இருந்த மற்றொரு படமான “ஜன கன மன” திரைப்படத்திற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. லைகர் படத்தின் தோல்வியால் மை ஹோம் குரூப் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. மேலும், பூரி ஜெகன் லைகர் படத்தின் வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, அவர்கள் செய்த செலவில் 30% வரை அவரே பொறுப்பேற்கப் போவதாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் தொடர்ந்து பல படங்கள் தோல்வியடைந்து வருவதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிறது. எனவே தற்போது தெலுக்கு திரைத்துறையில் பல புதிய நெறிமுறைகளைக் கெண்டு வந்துள்ளனர். குறிப்பாக நடிகர்களின் ஊதியம் குறித்த பல புதிய நெறிமுறைகளைக் கொண்டுவந்துள்ளனர்.