டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார்.
ரத்தன் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்நதவர் சைரஸ் மிஸ்த்ரி. இவர் 2012ம் ஆண்டு ரத்தன் டாடா பதவி விலகிய பிறகு டாடா குழுமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த 2016ம் ஆண்டு டாடா குழும தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் சைரஸ் மிஸ்த்ரி இன்று அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் சூர்யா ஆற்றின் மேல் செல்லும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த டிவைடரில் கார் எதிர்பாராதவிதமாக திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







