பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து! சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசியதாக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசியதாக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி, மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து ஒரு யூ டியூப் சேனலில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்து அவதூறாக பேசியதாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ப.கவியரசு என்பவர் கடந்த ஜூலை புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து, பத்ரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த ஜூலை 30ம் தேதி கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமின் பெற்ற பத்ரி தன் மீதான வழக்கை ரத்து செயக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

உள்நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சிக்கும் வகையில் தாம் பேசவில்லை எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறை மீது தாம் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் பத்ரி சேஷாத்ரி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

தம்முடைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பிரமாண பத்திரத்தில் பத்ரி சேஷாத்ரி தெரிவித்திருந்தார்.இதனையடுத்து பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.