தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மோகிலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களான சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீநிகில், ரோகித் மற்றும் மாணவி நட்சத்திரா ஆகியோர் மோகிலாவிலிருந்து ஐதராபாத்திற்கு காரில் சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை மிர்ஜ குடா என்ற இடத்தில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீ நிகில், ரோகித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மாணவி நக்சத்திரா அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு செகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து தகவல் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் விபத்து குறித்த வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்







