சேலம் மாவட்டத்தில் 55 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் இன்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நோய்த் தொற்று குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து அரசு அறிவிப்பின்படி தொற்று குறைவாக இருந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இதன்படி சேலம், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, உடுமலை ஆகிய பகுதிகளில் 55 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டது. சேலத்தில் வெகுநாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டதால், ஊழியர்கள் திருஷ்டி சுத்தி பூசணிக்காயை உடைத்தனர். முகக்கவசம் அணிந்திருந்தவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் வழங்கப்பட்டது. மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மதுவை வாங்கிச்சென்றனர். அப்பகுதியில் ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.