29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்

தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்டா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கூட்டம் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு அபராத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றதாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 3 கோடியே 44 லட்சத்து 26 ஆயிரத்து 700 ரூபாய் அபதாரம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சமூக இடைவெளியை பின்பற்றாததால் 1,910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதிக அளவில் பொது இடங்களில் கூடியதற்காக 1,552 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading