தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 023 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 18 ஆயிரத்து 023 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 74 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்றில் இருந்து குணமடைந்து 31 ஆயிரத்து 045 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 20 லட்சத்து 28 ஆயிரத்து 344 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 409 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 765 அதிகரித்துள்ளது.
சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 1,437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் உயிரிழந்துள்ளனர். 3843 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டில் 773 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 279 பேருக்கும் திருவள்ளூரில் 407 பேருக்கும் திருச்சியில் 490 பேருக்கும் கோவையில் 2439 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.