தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு காவலர்கள், தங்களுக்கான கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதே காரணம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு, பொங்கலிட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கயிறு இழுக்கும் போட்டியை தொடங்கி வைத்து, குடிசை வீட்டில் இருந்த மாடுகளுக்கு பழங்களை அளித்தார். போலீசாரின் குடும்பத்தினருடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்ட முதலமைச்சர், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் வெற்றி நடைபோட்டு வருவதாவும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாகவும் தெரிவித்தார். இதற்கு, காவலர்கள், தங்களுக்கான கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதே காரணம் என அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த விழாவில் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் கலந்து கொண்ட இந்த விழாவில், போலீசாரின் குயிலாட்டம், கரகம், சிலம்பம், மல்லர் கம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனை தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோர் கண்டு கண்டுகளித்தனர்.