தொல்லியல் அகழாய்வுகள் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் வரும் 30ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதனைச்…

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் வரும் 30ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், அகரம், கொந்தகை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என ஏழு இடங்களில் முறையாக தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கற்கால இடங்களை கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பணிகள் அனைத்தும் வரும் 30ஆம் தேதி நிறைவடையும் எனவும் கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.