கசகஸ்தானில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாடு ஷூட்டர்கள் அபார வெற்றி!

16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ் வீராங்கனைகள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

 

கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இளைஞர் அணி அபாரமாகச் செயல்பட்டு, பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில், இந்திய அணி வென்ற நான்கு பதக்கங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர்களால் பெறப்பட்டுள்ளன.

இது தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்குப் பெரும் பெருமையைச் சேர்த்துள்ளது.

டிராப் யூத் மகளிர் பிரிவில், தமிழ்நாட்டின் வீராங்கனைகள் தனிஷ்கா, நிலா ராஜா பாலு, மற்றும் அந்த்ரா ராஜசேகர் ஆகியோர் பதக்கங்களை அள்ளிக்குவித்தனர்.

தனிஷ்கா: தங்கப் பதக்கம் 🥇

நிலா ராஜா பாலு: வெள்ளிப் பதக்கம் 🥈

அந்த்ரா ராஜசேகர்: வெண்கலப் பதக்கம் 🥉

இந்த மூவரும் இணைந்து, டிராப் யூத் மகளிர் அணிக்கான பிரிவிலும் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினர். டிராப் யூத் ஆண்கள் பிரிவில், தமிழக வீரர் யுகன் S.M. தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, இந்திய ஆண்கள் அணிக்கும் தங்கப் பதக்கம் வெல்ல உதவினார்.

இந்த இளம் வீரர்களின் வெற்றி, தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, இந்தியாவிற்கு சர்வதேச அரங்கில் ஒரு வலுவான நிலையை உருவாக்கியுள்ளது. மேலும், தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்களின் மகள் நிலா, மற்றும் பிரபல தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் அவர்களின் மகள் அந்த்ரா ஆகியோரின் இந்த வெற்றி, விளையாட்டுத் துறையில் இளம் தலைமுறையினரின் திறமையையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.