நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் 2022 வரை, மக்களவையில் உள்ள 39 தமிழக எம்.பி-க்களும், மாநிலங்களவையில் உள்ள 18 தமிழக எம்பி-க்களும் அவரவர் பணியை எவ்வாறு செய்துள்ளனர்? என்ன மாதிரியான சாதனைகளை புரிந்துள்ளனர்? எத்தனை விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்? இதில் அதிக விவாதங்களை எழுப்பியது யார்? போன்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைக்காகவும், தொகுதி , மாநிலம் மற்றும் தேசிய பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதற்கு எதுவாகவும், மக்களாலும், கட்சிகளின் பெரும்பான்மை மூலமாகவும் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து மக்களவையில் 39 உறுப்பினர்களும் , மாநிலங்களவையில் 18 உறுப்பினர்களும் என தேர்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் மட்டும் 05 உறுப்பினர்கள் ஓய்வு பெற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் உறுப்பினர்கள் அவையில் தறாமல் கலந்து கொண்டு தங்கள் தொகுதி, மாநிலம் மற்றும் தேசிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாம். இதுதவிர விவாதங்கள், தனியார் மசோதா மற்றும் கேள்விகள் மூலம் தங்கள் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளலாம். ஒட்டு மொத்த பிரச்சனைகளையும் மக்களவையில் எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கபடுகிறது.
பூஜ்ய நேரம் என்ப்படும் (Zero Hour) நேரத்தில் அனைத்து எம்.பிக்களும் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக பேசலாம். இதில் உறுப்பினர்கள் தாங்களே தயாரித்து பேசுவது அல்லது பிறர் பேசியதை வழிமொழிவது என இருவகையாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.
ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்ததும், பிரைம்பாயிண்ட் ஃபவுண்டேஷன், பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளின்படி, பாரளுமன்ற உறுப்பின்ர்கள் ஆற்றிய பணிகளை ஆயுவு செய்து அறிக்கை வெளியிடுகிறது. அது தவிர , ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய அளவில் சிறந்த பணியாற்றிய உறுப்பினர்களுக்கு சன்சத் ரத்னா (Sansad Ratna Award) விருது வழங்கி கவுரவிக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில், 86 சிறந்த உறுப்பினர்கள அகில இந்திய அளவில் கவுரவிக்கப்ப்ட்டு இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்ததும், பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன்,பிஆர்எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளின்படி உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது.
அதன்படி உலக அளவில், நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு , அவர்களின் பாராளுமன்ற செயல்பாடுகளின் அடிப்படையில் சிவில் சமூகத்தால் வழங்கப்படும் ஒரே விருதாகும். இது இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்ஸால் அங்கீகரிக்ப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலிடம்:
கடந்த 2022ம் ஆண்டில், ராஜ்ய சபாவில் தமிழ்நாட்டு உறுப்பினர்களில், திமுகவை சேர்ந்த திருமதி கனிமொழி என்.வி.என். சோமு அவர்கள் 136 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் 2022ம் ஆண்டில் தமிழக எம்.பிக்களில் ராஜ்ய சபாவில் 125 கேளிகள் எழுப்பி கேள்விகள் பிரிவிலும் முதலிடத்தில் இருக்கிறார். இவர் 77 சதவிகித அமார்வுகளில் பங்கேற்றுள்ளார்.
திமுகவை சேர்ந்த பி வில்சன் 3 தனியார் மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார். மேலும் 111 கேள்விகள் , 17 விவாதங்களில் பங்கேற்று 131 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த திரு தம்பி்துரை அவர்கள் 36 சுய முயற்சி விவாதங்களில் பங்கேற்று இந்த பிரிவில் முதலிடம் வகிக்கிறார்.