நேர்மையை நோக்கிய மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி வருவதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலம் ஏற்காடு பகுதியில், தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ஏற்காட்டில் விளையும் பொருட்களை இப்பகுதியிலேயே விற்பனை செய்யும் மையமும், பழ ஆலையும் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், கல்வி, சுகாதாரத்தை அரசே ஏற்று நடத்தும் எனவும் அறிவித்தார். விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை, சம ஊதியம் என்பதே தங்களின் லட்சியம் எனவும், அமைச்சரவையில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் கமல்ஹாசன் உறுதி கூறினார்.







