கொரோனா பலி எண்ணிக்கையை முற்றிலும் கட்டுப்படுத்திய தமிழகம்!

தமிழகத்தில் ஒரே நாளில் 505 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மேலும் 505 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8…

தமிழகத்தில் ஒரே நாளில் 505 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மேலும் 505 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 37 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 145 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 956ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.ஒரே நாளில் 526 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 907ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 575 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply