முக்கியச் செய்திகள்இந்தியா

பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு செல்லும் தமிழ்நாடு பெண் ரயில்வே லோகோ பைலட்!

டெல்லியில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாடு பெண் ரயில்வே லோகோ பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இதனையடுத்து மோடி பிரதமராக நாளை பதவியேற்கவுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில், இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ். மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா இதுவரை 2 லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத்,  ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கி உள்ளார்.  ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல் ) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளது.  சென்னை – விஜயவாடா,  சென்னை – கோயம்புத்தூர் பிரிவில் துவக்க நாள் முதலே வந்தே பாரத் ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர்11 ம் தேதி ரயில் முன்பதிவு – மின்னல் வேகத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன..!!

Web Editor

இபிஎஸ் சொல்வதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – ஓபிஎஸ் பதில்

EZHILARASAN D

யு19 உலகக்கோப்பை |  பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா… இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading