தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசனுக்கும், அறிக்கையை தயாரிக்க உதவிய அரசு அதிகாரிகளுக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமூகநலத் திட்டங்களில் எந்தக் குறையும் வைக்காமல், வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நிதி நிர்வாகத்தை வளர்த்துள்ளோம் என்பதை நிதிநிலை அறிக்கை எடுத்துக் காட்டி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் எடுத்துச் செல்ல வழிவகுக்கும் அறிவிப்பு, பழமை வாத கருத்துகள் என்னும் இருள் கவ்வியிருக்கும் பகுதிகளுக்கு, அறிவொளி பாய்ச்சும் அறிவிப்பு எனக் கூறியுள்ளார். பத்தாண்டு கால சரிவைச் சரி செய்வது மட்டுமல்லாமல், அடுத்த 25 ஆண்டு கால உயர்வை உணர்த்துவதாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்..
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நூற்றாண்டு கால திராவிட சமூக நீதிக் கொள்கைகளையும், நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.