அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை; சசிகலா கூறுவது வடிகட்டிய பொய் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சசிகலா கூறுவது வடிகட்டிய பொய் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிபேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை…

அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சசிகலா கூறுவது வடிகட்டிய பொய் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிபேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்
விதமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்பும் கூட மீனவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. 10 க்கும் மேற்பட்ட கேள்விகளை மீனவர்களிடம் கேட்டு அலைக்கழிப்பு செய்வதாக குற்றம்சாட்டிய அவர், புயல் கரையை கடந்த மகாபலிபுரத்தை முதலமைச்சர் ஆய்வு செய்யவில்லை. நாங்கள் தான் ஆய்வு செய்ததாக கூறினார்.

மீனவர்கள் அதிமுகவுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள். என தெரிந்து இவர்களை
வஞ்சிக்கிறது திமுக  அரசு. திமுகவின் சார்பில் இன்று காசிமேட்டில் சுனாமி தின அஞ்சலிக்கு 50 பேர் திருடர்கள் போல வந்து திருடர்கள் போல் சென்றனர் என்றும் விமர்சித்தார்.

மீன்வளத்துறை அமைச்சரின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, அவருக்கு இந்த துறையை பற்றிய ஒன்றும் தெரியாது அவர் ஒரு வியாபாரி. பணக்கனக்கு பார்க்கின்ற வியாபாரி தான். மக்களின் மனகணக்கை பார்த்து செயல்படுவதாக தெரியவில்லை என விமர்சித்தார். திமுக அரசின் எந்த துறைகளிலும் மக்கள் நலப் பணிகள் எதுவுமே நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும் ஓபிஎஸ் இன் ஆலோசனை கூட்டம் குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் அவரே
ஒரு டம்மி பீஸ். அவர் ஒரிஜினல் கிடையாது என்று விமர்சித்தார். அதிமுகவை இணைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறிய சசிகலாவின் கருத்திற்கு அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யின் ஒரு உருவமாய் இருப்பவர் தான் சசிகலா என்றும் விமர்சித்துள்ளார்.


பொங்கல் தொகுப்பில் செங்கரும்பை கொள்முதல் செய்யாதது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  பொங்கல் இல்லாத கரும்பு உண்டா என கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொங்கல் தொகுப்பில் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இப்பொழுது ஆட்சியில் இருக்கும்
போது ஆயிரம் ரூபாய் தான் கொடுக்கிறார். அதிமுக ஆட்சியில் 2 கோடி ரேஷன் அட்டை காரர்களுக்கு வழங்கினோம்.

பொங்கல் தொகுப்பு குறித்து மூத்த அமைச்சர் எ. வ வேலுவே ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்து விட்டார். நிர்வாகத் திறமையற்ற அரசு நடைபெறுகிறது என்பதற்கு இந்த
ஒப்புதல் வாக்குமூலமே உதாரணம். அரசாங்கம் ஒரு பொருளை கொள்முதல் செய்கிறது என்றால் அதன் தரத்தை உறுதி செய்வதுதான் அரசாங்கத்தின் வேலை. கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்களில் உரிய பரிசோதனை செய்த பின்னர் பொருட்களை பொதுமக்களுக்கு கொடுத்தால் ஏன் குறை சொல்ல போகிறார்கள். நிர்வாக திறமை இல்லாத அரசு என்ற ஒப்புதல் வாக்குமூலமாக தான் எ.வ வேலு பேட்டியை பார்க்கிறேன்.


பொங்கலை நம்பி கரும்பு விளைவித்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.
திமுகவின் தோழமைக் கட்சிகளே கரும்பை விநியோகம் செய்யாததற்கு அறிக்கை
வெளியிட்டுள்ளனர். கரும்பு இல்லாத பொங்கல் உண்டா என்று கூறிய அவர் எ.வ.வேலுக்கு பல் இருக்கா இல்லையா என்பது தெரியவில்லை. அதனால்தான் பொங்கல் தொகுப்பில் கரும்பு வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல. என விமசித்தார்.

ஒரே வரியில் சொல்லப்போனால் யானை பசிக்கு சோளப்பொறி என்பதுதான் பொங்கல் தொகுப்பு. என்னுடைய சொத்து விவரம் முழுவதும் இணையதளத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். வெறும் 299 ரூபாய் பாட்டா செருப்பை அணிந்துதான் நான் லண்டனுக்கே சென்று வந்துள்ளேன். ஸ்டாலின் போன்று விலை உயர்ந்தவை அணியவில்லை. ஒன்றுபட்ட அதிமுக தான் தற்பொழுது இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.