டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியை வங்காளதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் முதல் போட்டியில் வங்கதேச அணி மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நஜ்முல் ஹுசேன் 25 ரன்களும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சௌமியா சர்கார் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அணியில் அதிகபட்சமாக ஆபிப் ஹுசேன் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களம் கண்டது. அணியின் தொடக்க ஆட்டக்காரரான விக்ரம்ஜித் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மேக்ஸ் 8 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பஸ் டி லீட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து திணறிய நெதர்லாந்து அணியை காலின் அக்கர்மன் சரிவில் இருந்து மீட்க போராடினார். ஆனால் அவருக்கு உதவியாக மறுபுறம் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. காலின் தன் பங்குக்கு 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது. இதனால், 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.