டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவியேற்க தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உமேஷ்குமாருக்கு  ஜூலை 11ஆம் தேதி வரை துணைநிலை ஆளுநர்  பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…

டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உமேஷ்குமாருக்கு  ஜூலை 11ஆம் தேதி வரை துணைநிலை ஆளுநர்  பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 21ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி உமேஷ்குமார் டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார்.  இதனை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உமேஷ்குமாருக்கு ஜூலை 11ஆம் தேதி வரை துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.