ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பார்வர்ட் பிளாக் ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 19வது மாவட்ட மாநாடு அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் பி.வி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த பி.வி.கதிரவன், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்தநாள் இன்று அவரது பிறந்த நாளை தேச பக்தி தினமாக அறிவிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். இன்றும் இளைஞர்களின் எழுச்சியாக வாளும் அவரது பிறந்த நாளை தேச பக்தி நாளாக அறிவிக்கும் பட்சத்தில், இளைஞர்கள் இடத்தில் தேச பக்தியை வளர்க்கும் வண்ணமாக இருக்கும்.
அதே போல் காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியை எப்படி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோ அதே போன்று சுதந்திரத்திற்காக காந்தியை விட அதிகப்படியாக ஆங்கிலேயர்களை பயமுறுத்தி விடுதலையை பெற்றுத் தந்த நேதாஜி பிறந்த நாளை தேச பக்தி தினமாக அறிவித்து மத்திய அரசும், மாநில அரசும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. திமுக எங்களது முழு ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதோடு தேர்தல் பணிகளையும் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.,