மதுரை அருகே அழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவ விழாவையொட்டி, நூபுர கங்கையில் எழுந்தருளி தீர்த்தமாடிய சுந்தரராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை அருகே, 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பட்ட திருத்தலமுமான ஶ்ரீகள்ளழகர் திருக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தைலக்காப்பு உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையொட்டி இந்த ஆண்டிற்கான தைலகாப்பு உற்சவ விழா கடந்த 24ஆம் தேதி தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீகள்ளழகர் என அழைக்க கூடிய சுந்தரராஜ பெருமாள் நூபுரகங்கையில் எழுந்தருளி தீர்த்தமாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதனையொட்டி முன்னதாக, மலை அடிவாரத்திலுள்ள ஸ்ரீகள்ளழகர் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து, சுந்தராஜபெருமாள் சடைமுடியுடன், ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை மற்றும் பச்சை வர்ண கிளியுடன் அலங்கரிக்கப்பட்டு, பல்லக்கில் நூபுரகங்கைக்கு புறப்பாடாகி திருக்கல்யாண மணிடபத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மேலதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட பெருமாளுக்கு மலையின் வழியில் உள்ள அனுமார், கருடன் தீர்த்த எல்லையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .
இதனையடுத்து , மலைப்பாதை வழியாக சென்று மலை உச்சியில் உள்ள நாபுரகங்கை மாதவி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர் பெருமாளுக்கு சம்மங்கி சந்தனாரி,
திருத்தைலங்கள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அப்போது சுவாமியின் சடைக்கு தைலம் வைக்கப்பட்டு சிக்கு எடுத்து தலை வரப்பட்டது. தொடர்ந்து நுரகங்கை தீர்த்தத்தில் முழு அலங்காரத்துடன் பெருமாள் நீராடினார். அப்போது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்து தீர்த்தமாடினர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும்
வழங்கப்பட்டது.