நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில்
“வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 1,050 மாணவர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. அதன் ஒரு
பகுதியாக இம்மாதம் (ஜூலை) முழுவதும் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர் பிரச்சார இயக்கத்தை துவங்கியுள்ளது. இதன் டிஜிட்டல் பார்ட்னராக daily huntம் இணைந்துள்ளது. அதன் துவக்க நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் பிரச்சாரம் என்பது நடத்தப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் முத்துக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராம், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர், காவல் உதவி ஆய்வாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வேண்டாம் போதை என்பதை வலியுறுத்தி 1,050 மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் மாணவர்களிடையே பேசிய காவல் ஆய்வாளர் முத்துக்குமார், மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராம், மாணவர்கள் மட்டுமல்லாது
தற்போது மாணவிகளும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வருவது வேதனை அளிப்பதாகவும், இந்த போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
காவல் ஆய்வாளர், வட்டார மருத்துவ அலுவலர், தலைமை ஆசிரியர் ஆகியோர் இந்த
விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ள நியூஸ் 7 அன்பு பாலத்திற்கு நன்றி
தெரிவித்தனர்.