சவாலை வென்ற ஐந்தாம் வகுப்பு மாணவி சபீதாவை, தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவாரூர் நகர் பகுதியில் மெய்பொருள் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் சுமதி, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 முதல் 20
வரையிலான வாய்ப்பாட்டை ஒப்பிக்கும் மாணவர்களை தனது இருக்கையில் அமர வைத்து, கீரிடம் அணிவித்து கவுரவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சவாலில் 5ஆம் வகுப்பு மாணவி சபீதா, வாய்ப்பாட்டை அசால்ட்டாக ஒப்பித்து
அசத்தியுள்ளார். இதையடுத்து மாணவி சபீதாவை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
ஒன்றிணைந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரவைத்து, அவருக்கு கீரிடம்
பொறுத்தி அழகு பார்த்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
-ம.பவித்ரா








