கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஷவர்மா சாப்பிட்டதால் 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக ஷவர்மா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு பொருளாக மாறி உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஷவர்மா? என்று அச்சப்படும் வகையில், கேரளாவில் துயரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேரள மாநிலம் காசர்கோடு செருவத்தூர் பகுதியில் பேக்கரி கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட 30 பேர் காசர்கோடு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செருவத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி தேவானந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மைச் செய்தி: ‘3வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே’
உயிரிழந்த மாணவி கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் – பேரளம் கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஈ.வி. பிரசன்னாவின் ஒரே குழந்தையான தேவானந்தா என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள மாநில உணவுத்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் உட்பட கடையில் பணியாற்றியை அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.