தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக இன்று காலை 5.30 மணியளவில் வலுவடைந்தது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில்
கடந்த 8-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது படிப்படியாக
வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அந்த புயலுக்கு ஏமன் நாடு ‘மோக்கா’ என்ற பெயர் சூட்டியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போர்ட் பிளேயருக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 510 கி.மீ., காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 1210 கி.மீ மற்றும் சிட்வே (மியான்மர்) க்கு தென்-தென்மேற்கில் 1120 கி.மீ. மோக்கா புயல் நிலை கொண்டிருந்தது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக தீவிரமடைந்து இன்று நள்ளிரவில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, அது படிப்படியாக மீண்டு நாளை காலை முதல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக் கடலில் நாளை மாலையில் அதிதி தீவிர புயலாக மேலும் வலுவடையும்.
இந்தப் புயல் வரக்கூடிய 13 ஆம் தேதி மாலையில் அதன் உச்சக்கட்டத்தை எட்டும். அதன்பிறகு, மே 14 காலை முதல் சிறிது வலுவிழந்து தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்பியு (மியான்மர்) இடையே மே 14 ஆம் தேதி முன்பகல் நேரத்தில் அதிகபட்சமாக 120-130 கிமீ இடையே 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.