நாட்டிலேயே தமிழ்நாடு தான் பிளாட்டிக் அல்லாத மாநிலம் என்ற நிலையை எட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கருப்பண்ணன், பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் 14 வகையான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலிம் பிளாஸ்டிக் பேக்குகள் பயன்பாட்டில் உள்ளது. கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் கைவிடப்பட்டதாக பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு உடனடியாக இடைமறித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. முதல் ஆறு மாதங்கள் தொடர் கண்காணிப்பு நடத்தி பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்டது. ஆனால் அதன் பின் கொரோனா வந்ததால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
அதன் பின் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அதிமுக ஆட்சி கொண்டு வந்த திட்டமாக பார்க்காமல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு பொருளை தடை செய்வதற்கு முன் அதற்கு மாற்று பொருளை அறிவிக்க வேண்டும் ஆனால் அதை கடந்த அரசு செய்ய தவறிவிட்டதாக அமைச்சர் கூறினார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு பதில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதலமைச்சர் கொண்டு வந்தார். மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டதன் பயனாக மஞ்சப்பை மற்றும் துணிப்பை பயன்பாடு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார். மனித இனத்திற்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம் என்று கூறினார்.