நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள்: பயனாளிகள் எண்ணிக்கை உயர்வு – முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள், மக்களுக்குப் பெரும் பயனளித்து வருகின்றன முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள், மக்களுக்குப் பெரும் பயனளித்து வருகின்றன. இதுவரை மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன. முதல் வாரம் (ஆகஸ்ட் 2) – 44,795 பேரும், இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) – 48,046 பேரும், மூன்றாவது வாரம் (ஆகஸ்ட் 23) – 56,245 பேரும் என மருத்துவ முகாம்களில் மக்கள் பயன்பெற்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த முகாம்கள் மூலம், ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவ வசதிகள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் பேசிய முதலமைச்சர், “மருத்துவ சேவை வழங்குவதிலும், மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’ என உறுதி செய்வோம்!” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பொதுவான நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பது மட்டுமன்றி, பல்வேறு சிறப்பு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த முகாம்கள் மூலம் கிடைக்கும் தரவுகள், மக்களின் உடல்நலத் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப எதிர்கால சுகாதாரத் திட்டங்களை வகுக்க அரசுக்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.