ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.   ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று குறைந்த அளவு படகுகளே மீன்வளத்துறை…

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று குறைந்த அளவு படகுகளே மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

 

அப்போது, ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கரையூரை சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, அர்ஜூனன், தங்கப்பாண்டி, தங்கச்சிமடத்தை சேர்ந்த மடுகு பிச்சை, சிவகாமி நகரை சேர்ந்த ராஜா ஆகிய 6 பேர் கடலுக்கு சென்றுள்ளனர்.

 

அவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இலங்கை மன்னர் பரப்பில் வைத்து கைது செய்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக விளக்கமளித்துள்ளனர்.

பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு இடையில், ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேர் மற்றும் அவர்கள் சென்ற விசைப்படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.