33.9 C
Chennai
April 25, 2024
தமிழகம் செய்திகள்

இலங்கையை சேர்ந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்!

விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே இலங்கையை சேர்ந்த விசாரணை கைதியை புழல் சிறையில் அடைக்க சென்றபோது தப்பி ஓடியுள்ளார்.

விழுப்புரம் வழியாக சென்னை ஆயுதப்படை காவலர்கள் இலங்கை திரிகோணமலை சார்ந்த ரியாஸ் கான் ரசாக் என்பவரை மதுரை மேற்குவாசல் காவல் நிலையப் பாஸ்போர்ட் வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, புழல் சிறைக்கு  அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது  விக்கிரவாண்டி அருகே பேரணி என்ற இடத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஓட்டலில் இரவு சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்திய போது, கைதி ரியாஸ் கான் ரசாக் திடீரென ஓட்டலில் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்பின்னர் பாதுகாப்பு காவலர்கள் குற்றவாளியை தேடி பார்த்தும் கிடைக்காததால்  காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததன் பேரில் டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் கிராமங்களில் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு இவரைக் கண்டால் 9498100490, 9498100485 என்ற  செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

கா. ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading