நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசின் ஏராளமான திட்டங்களையும், சாதனைகளையும் குடியரசு தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரை தொடங்கியது. இதில் பேசிய அவர், சுதந்திர தின விழா இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வ.உ.சி, நேதாஜி உள்ளிட்ட அத்தனை போர் வீரர்களுக்கும் எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தொடங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து உரையாற்றிய குடியரசு தலைவர், “கொரானா தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் தகுதியானவர்களில் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தியதன் மூலம் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்ந்துவருகிறது. இந்த கடுமையான காலத்தின் மூலம் இந்தியா ஏராளமான விசயங்களை கற்றுக்கொண்டுள்ளது.
கடந்த காலங்களை விட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவின் மருந்து துறை நாட்டிற்கு பெரும் பங்கு வகித்துள்ளது. உலக அளவில் சுமார் 180 நாடுகள் இந்தியாவின் உதவிகளை பெற்றுள்ளன” என தெரிவித்தார்.
“சமுதாயத்தில் சம நிலை இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கரின் எண்ணம், அதனை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம், ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளில் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வேளாண் உற்பத்திப் பொருட்களின் சதவிகிதம் 33 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள நதிகளை இணைக்கும் திட்டங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அரசால் ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழுக்கள் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு போதுமான பயிற்சிகளை வழங்கி உள்ளது.
மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழுக்கள் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு போதுமான பயிற்சிகளை வழங்கி உள்ளது; இந்த குழுவின் முக்கியமான நோக்கம் பெண்களை மையப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உள்நாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து பேசும்போது, கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார்.
மேலும் பேசிய அவர், “கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 36 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் போடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கத்தில் மத்திய அரசு அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படுத்திவருகிறது. மேலும் நாடு முழுவதும் இருபத்திமூன்று பசுமை வழிச்சாலை திட்டங்களை செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது.
Drone தொழில்நுட்பத்தில் மத்திய அரசு தற்போது அதிக கவனம் செலுத்துவதால் இந்தத் துறை சார்ந்த ஏராளமான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. இந்த தொழில் துறைக்காக இருந்த கட்டுப்பாடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது
பாதுகாப்புத்துறையில் சுயசார்பு செயல்பட்டு என்பதை அரசு உறுதி செய்து வருகிறது. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் பாதுகாப்பு துறைக்கு தேவையானவற்றை நாட்டிலேயே தயாரிப்பதை உறுதி செய்து இருக்கிறது. இதனால் விரைவில் நமது ராணுவ வீரர்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்களை பயன்படுத்த உள்ளார்கள்” – இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.