இந்தியாவை சிலர் துண்டாக்க நினைக்கின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பினை மக்கள் மத்தியில் புதுப்பிக்க செய்யும் வகையில் காசி தமிழ் சங்கமம் நேற்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 9 ஆதினங்கள், பாஜக மூத்ததலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த காசி தமிழ் சங்கமம் அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நாட்டின் ஒருமைப்பாடு தேசம், தேசியம் என்பது சட்டத்தின் வரையறையால் ஏற்படுத்தப்பட்டது கிடையாது. காசிக்கும், தமிழகத்துக்கும் பன்னெடுங்காலமாக தொடர்பு உள்ளது. இளையராஜாவை பற்றி பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு நிகழ்ச்சி எப்படி நடக்க முடியும் என இளையராஜா வியந்து கூறுகிறார். பிரதமரை பார்த்து வியந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவை துண்டாக்க சிலர் துடிக்கின்றனர். தமிழகத்தில் மொழி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சியில் பனாராஸ் பல்கலை கழகத்தில் தமிழுக்காக ஒரு இருக்கையை பாஜக அரசு உருவாக்கி கொடுத்துள்ளது.
பிரதமர் மோடியின் தொகுதியான வாராணாசியில் தமிழ் மொழியை புறக்கணித்தால் நாட்டிற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்றார். ஆனால் இதனை அகிலேஷ் யாதவ், மாயாவதி, காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியும் எதிர்க்கவில்லை. உத்தரபிரதேச மக்களும் இதனை எதிர்க்கவில்லை. காரணம் மொழி பிரிவினை அம்மக்களிடையே ஊட்டப்படவில்லை.
காசியில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் மூலம் தமிழக இளைஞர்கள் உண்மை அறிவார்கள். வாழ்நாள் முழுவதும் பாவம் செய்த வீரமணி ரயிலில் காசிக்கு போய் வரட்டும் புண்ணியமாவது கிடைக்கும்.