முக்கியச் செய்திகள்உலகம்இந்தியாதமிழகம்சினிமா

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இதையும் படியுங்கள் : ’தொடர்ந்து இணைந்திருங்கள்……’ – இன்று மாலை 6 மணிக்கு ’மாமன்னன்’ அப்டேட்!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முதல் பாகத்தை தொடர்ந்து பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்துக்கான ப்ரோமோஷன்களும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 16 – 18 கோடி ரூபாயும், இந்திய அளவில் 28 – 30 கோடி ரூபாயும், உலக அளவில் 58 – 60 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும், படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார்” – சிவகார்த்திகேயன்

Jeba Arul Robinson

“மணிப்பூரை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்!” – ராகுல் காந்தி விமர்சனம்!

Web Editor

“கீழடி அகழாய்வில் கிடைத்த 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!” – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading