மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் குடமுழக்கு
விழா நவகிரக ஹோமத்துடன் இன்று தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர்
சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய
பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32
ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி குடமுழக்கு விழா நடைபெற உள்ளது.
இதற்கான திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
குடமுழக்கு விழாவை முன்னின்று நடத்திட, தருமபுரம் மடத்திலிருந்து சொக்கநாத
பெருமான் உடன் குரு லிங்க சங்கம் ,பாதயாத்திரை ஆக சீர்காழி வந்தடைந்தார். பின்னர், சொக்கநாத பெருமான் மாசிலாமணி நிலையத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து குடமுழக்கு விழாவை முன்னிட்டு யஜமான அனுக்ஞை, தேவானுக்ஞை,
கணபதி ஹோமம் நவகிரக ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. முன்னதாக
தர்மபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் சிறப்பு கோ பூஜை, கஜ பூஜை
மற்றும் ஒட்டக பூஜைகளை செய்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து
கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
-கு. பாலமுருகன்