சிங்கப்பூர் அதிபர் தேர்தல் : தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம்  வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த 2017-ம்…

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம்  வெற்றி பெற்றுள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அதனால், ஹலீமா யாகூப் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிங்கப்பூர் அதிபர் தேர்தல் (செப்டம்பர் 1) நேற்று நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் பிறந்த தமிழரான முன்னாள் அமைச்சா் தாமன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான கோக் சாங், டான் கின் லியான் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர்.

நேற்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முக ரத்னம் அபார வெற்றி பெற்றார். இதனையடுத்து சிங்கப்பூரின் 9-வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்ட மற்ற இரு வேட்பாளர்களுக்கு 20 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.