ஷிகர் தவனை அடித்து உதைத்த தந்தை.. என்ன காரணம் தெரியுமா?

பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாததால் அதிருப்தி அடைந்த அந்த அணியின் வீரர் ஷிகர் தவனின் தந்தை, மகனை அடித்து உதைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாததால் அதிருப்தி அடைந்த அந்த அணியின் வீரர் ஷிகர் தவனின் தந்தை, மகனை அடித்து உதைத்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 15வது ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 7 தோல்வி, 7 வெற்றி என 6வது இடத்தில் உள்ளது. கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையிலான அணியில் அதிரடி வீரர் ஷிகர் தவன் இடம்பெற்றிருந்தார். இந்த சீசனில் மொத்தம் 453 ரன்களை எடுத்தார்.
இந்நிலையில், வீட்டுக்குத் திரும்பியதும் ஷிகர் தவனை அவரது ஏன் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லவில்லை என்று கூறி விளையாட்டாக அடித்து உதைத்தார்.

தனது தந்தை அடிக்கும் வீடியோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறாததால் தந்தையால் நாக் அவுட் செய்யப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியபோதிலும் அவருக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.