பாலியல் புகார்; பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு

பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க, அனைத்து பள்ளிகளிலும் வரும் காலங்களில் பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார். கோவை காளப்பட்டி பகுதியில்…

பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க, அனைத்து பள்ளிகளிலும் வரும் காலங்களில் பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது பேசிய அமைச்சர், CSR activity மூலமாக பல தன்னார்வ அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல உதவிகளை செய்து வருகின்றது. தொடர்ந்து உதவிகள் கிடைக்கபெற்று வருகிறது. இன்னும் உதவிகள் கிடைக்க, அதற்கென்று ஒரு தனியாக செயலி உருவாக்கப்படும். அதன் மூலமாக இன்னும் முறையாக, தேவைகேற்ப உதவிகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

கோவையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்பறுத்தல் சம்பந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணைக்காக அந்த பள்ளிக்கு சென்ற போது, பள்ளி நிர்வாகம் மலுப்பலான பதில் அளித்ததாகவும், பின்னர் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு. சம்பந்தபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக குற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும் என்றும், இது போன்ற பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களிலும் ஹெல்ப்லைன் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பாக மாணவர்களுக்கு அதிகபடியான விழிப்புணர்வு இல்லை. இன்னும் முழுவீச்சில் பள்ளிகள் முழுமையாக திறந்த பிறகு அது தொடர்பான விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் மற்றும் உடனடியாக பள்ளி கட்டணம் கட்ட வேண்டும் என்பது தொடர்பாக புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இது தொடர்பாக அரசு தொடந்து கல்வி நிறுவனங்களின் மீது எச்சரிக்கை விடுப்பது மட்டுமல்லாமல் நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்க ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், வரும் 19-ஆம் தேதிக்கு பிறகு அதுபோன்ற அறிவுப்புகள் பள்ளி கல்வி துறை சார்பாக வெளியிடப்பட்டு, முறையாக மாணவர்களுக்கு புகார் தெரிவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.